நம்ப பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வருத்தமா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் சர்தார்ஜி ஜோக், சர்தார்ஜி ஜோக்னு சொல்லி நம்மள ரொம்ப சத்தாய்கிறாங்களே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு கட்டணும்னு ரொம்ப யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த இன்டர்நெட் வந்ததுக்கு அப்பால நம்ப நெலம ரொம்ப மோசமா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.
அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்
எவ்ளோ யோசிச்சும் வேற வழி ஒண்ணும் தோணாத்னால, சரி நம்ப பெரிய அண்ணாத்த கடவுள் கிட்டயே கேட்டுக்கலாம்னு கடுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்தன பண்ண ஆரம்பிச்சாரு. ஒரு வாரம் ஆச்சு. அதுக்குமேல கடவுளுக்கே பொறுக்க முடியாம நம்ப பான்டா அண்ணாத்த முன்னால வந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.
அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்
பான்டா அண்ணாத்த இதுக்குதான காத்துகினு இருந்தாரு! "ஆண்டவா இனிமே இந்த ஒலகத்துல ஒரு பய சர்தார்ஜி ஜோக்னு வாயத் தொறக்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... தமிழ்மணம், பதிவு, இன்டர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்லயும் இதுவரைக்கும் இருக்குற சர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த நிமிட்லேர்ந்து காணாம பூடணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.
அடுத்த நிமிட் இந்த உலகத்லேர்ந்து எல்லா சர்தார்ஜி ஜோக்கும் காணாம பூட்ச்சு. நகைச்சுவை ஒலகம் அப்டியே ...இன்னாது...ஸதம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு பதினாலு ஒலகத்லயும் நகைச்சுவையின் எதிர்காலம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க...
~தொடரும்.
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு