Breaking News! சர்தார்ஜி ஜோக் இனி உலகில் கிடையாது!

அத்தியாயம் 1 - பான்டாவின் சோகம்

ந‌ம்ப‌ பான்டா சிங் அண்ணாத்தைக்கு ரொம்ப வ‌ருத்த‌மா பூட்சி. இது இன்னாடா எங்கப் போனாலும் ச‌ர்தார்ஜி ஜோக், ச‌ர்தார்ஜி ஜோக்னு சொல்லி ந‌ம்ம‌ள‌ ரொம்ப ச‌த்தாய்கிறாங்க‌ளே இதுக்கு எப்டினாச்சும் ஒரு முடிவு க‌ட்டணும்னு ரொம்ப‌ யோசிச்சிகினே இருந்தாரு. அதுவும் இந்த‌ இன்ட‌ர்நெட் வந்த‌துக்கு அப்பால‌ ந‌ம்ப‌ நெல‌ம‌ ரொம்ப‌ மோச‌மா பூட்சேன்னு ரொம்ப பேஜார் பட்டுக்கினாரு.

அத்தியாயம் 2 - கடவுள் வந்தார்

எவ்ளோ யோசிச்சும் வேற‌ வ‌ழி ஒண்ணும் தோணாத்னால‌, ச‌ரி நம்ப பெரிய அண்ணாத்த‌ க‌ட‌வுள் கிட்ட‌யே கேட்டுக்க‌லாம்னு க‌டுமையா... அது இன்னா... ஆங்...பிரார்த்த‌ன‌ ப‌ண்ண ஆர‌ம்பிச்சாரு. ஒரு வார‌ம் ஆச்சு. அதுக்குமேல‌ க‌ட‌வுளுக்கே பொறுக்க முடியாம ந‌ம்ப பான்டா அண்ணாத்த‌ முன்னால‌ வ‌ந்துட்டாரு! "உன் பக்தியை மெச்சினோம், இன்னா வேணும் கொளந்தாய்னு" சும்மா ஏபி நாகராஜன் படம் கணக்கா பான்டாவப் பாத்து கேட்டாரு.

அத்தியாயம் 3 - மறைந்தன சர்தார்ஜி ஜோக்குகள்

பான்டா அண்ணாத்த‌ இதுக்குதான‌ காத்துகினு இருந்தாரு! "ஆண்ட‌வா இனிமே இந்த‌ ஒல‌க‌த்துல‌ ஒரு ப‌ய‌ ச‌ர்தார்ஜி ஜோக்னு வாயத்‌ தொற‌க்கக் கூடாது. அது மாத்ரம் இல்ல... த‌மிழ்ம‌ண‌ம், ப‌திவு, இன்ட‌ர்னெட்டு, புக், ரேடியோ, டிவி, சினிமா அல்லாத்ல‌யும் இதுவரைக்கும் இருக்குற‌ ச‌ர்தார்ஜி ஜோக் அல்லாம் இந்த‌ நிமிட்லேர்ந்து காணாம‌ பூட‌ணும்" அப்டீன்னு கேட்டுகினாரு. ஆண்டவன் "அப்டியே ஆகட்டும்" அப்டீன்னாரு.

அடுத்த‌ நிமிட் இந்த உல‌க‌த்லேர்ந்து எல்லா ச‌ர்தார்ஜி ஜோக்கும் காணாம‌ பூட்ச்சு. ந‌கைச்சுவை ஒல‌கம் அப்டியே ...இன்னாது...ஸ‌த‌ம்பிச்சு நின்னு போச்சு. "இனிமே ஈரேழு ப‌தினாலு ஒல‌க‌த்ல‌யும் ந‌கைச்சுவையின் எதிர்கால‌ம் இன்னா ஆவுமோ"னு அல்லாரும் திகைச்சு பூட்டாங்க‌...

~தொட‌ரும்.

இப்ப‌டிக்கு
ஜாம்ப‌ஜார் ஜ‌க்கு

கலைஞர், சோ, தினமலர்..!


அட! ரொம்ப நாளாச்சுபா இப்டி பாத்து!

நல்லாருங்க! இத்தப் பாத்தாவது நம்ப பதிவுலக பெரிய மன்ஸங்க‌ கத்துக்கக் கூடாதான்னு அண்ணாத்த கேக்குறாரு. நான் இன்னாத்த சொல்றது, நீங்களே சொல்லுங்க தலீவா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இது மட்டும் புரிஞ்சு போச்சு, நீங்க மெய்யாலுமே பெரிய மன்ஸன் தான்!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

அறை எண் 306 ல் அண்ணாத்த!!!

ஒரு தபா நம்ப‌ அண்ணாத்த ஆஃபீஸ் வேலையா வெளியூர் போயிருந்தப்ப அவருக்கு ஒரு படா ஹோட்டல்ல ரூம் போட்டிருந்தாங்க. நைட் ரும்ல தங்கிட்டு காலீல ஆஃபீஸுக்கு வர்றதா ஏற்பாடு.

ஆனா காலீல 10 மணி ஆகியும் அண்ணாத்த ஆஃபீஸ் வந்து சேராததால அல்லாரும் ரொம்ப டென்ஷன் ஆகிப் பூட்டாங்க. கட்சீல ஹோட்டலுக்கு போன் பண்ணிப் பாத்தா அண்ணாத்த பயங்கர கோவமா கீறாரு.

இன்னா மேட்டர்னா, அந்த ரூம்ல 3 கதவு இருந்து கூட அண்ணாத்தயால ரூம விட்டு வெளில வர முடியல. ஏன்?

விஷயம் இதான்: மொத கதவு துணி வைக்கிற அலமாரி கதவு. அது வளியா வெளில வர முடியுமா? ரெண்டாவது கதவு பாத்ரூம் கதவு. ஆச்சா, அதுவும் வேலைக்கு ஆவாது. சரியா? இந்த மூணாவது கதவு இருக்கு பாரு அத்தோட‌ கைப்புடில "Please Do Not Disturb" அப்டீன்னு ஒரு அட்டை தொங்கிகினு கீதுபா.

நீயே சொல்லு வாத்யார், நம்ப அண்ணாத்த எப்டி வெளில வருவாரு?

(சரீ, சரீ, கேள்விக்கு பதில் தெரீலேன்னா உட்ற‌ வேண்டிது தான? இதுக்கெல்லாம் ஏன் இப்டி டென்ஷன் ஆயி பல்ல நற நறன்னு கடிக்கிறீங்க?)

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

"இதைப் படிப்பவன் முட்டாள்"! (மன்ச்சுக்க வாத்யார்!)

ஒரு தபா நம்ம அண்ணாத்த‌ எங்கியோ போய்கினு இருந்தப்போ ஒரு செவுத்துல "இதைப் படிப்பவன் முட்டாள்" அப்டீன்னு எளுதி இருந்திச்சாம். அவுருக்கு வந்த கோவத்துல அத அழிச்சிட்டு "இதை எழுதியவன் முட்டாள்" அப்டீன்னு எளுதிட்டு வந்துட்டாரு!

பின்குறிப்பு: நம்ம அண்ணாத்த சொன்னாரு, இப்டி தலைப்பு வச்சீன்னா கண்டிப்பா "சூடான இடுகைல" வந்துரும்னாரு!

மெய்யாலுமா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

எப்டி இருந்த தமிழ்மணம் இப்டி ஆயி பூட்ச்சு!!!

இன்னிக்கி நாள் பூரா நம்ப இன்டர்னெட் மக்காராப் பூட்ச்சா, இப்பத்தான் வலைக் குள்ளார வரவே முடிஞ்சிது. வளக்கம் போல மொத வேலையா தமிழ்மணத்தத் தொறந்தா (ஜிமெயில் கூட அப்புறம் தான்!)... தலீவா, பக்குனு ஆகிப் பூட்ச்சு!

இத்தினி நாளா கூகிளுக்கு அட்த்தது தமிழ்மணம் தான்னுட்டு தமிழ் தெரியாத வெப் டெவலப்பர் ஆசாமிங்களக் கூட கூப்டுக் கூப்டு காம்சிகினு இருந்தேன். இன்னா ஒரு சிம்பிள் டிசைன்ல சூப்பர் பெர்பார்மன்ஸு! நாள் பூரா (மெய்யாலுமே நாள் பூராத்தான்) பாத்துகினே இருந்தாலும் கண்ண உறுத்தாத ஒரு அம்சமான டிசைன்.

யார் கண்ணு பட்டுச்சோ, திடீர்னு இப்டி ஆகிப் பூட்ச்சு! ஒரு பத்து நிமிட் பாக்குறதுக்குள்ளார டயர்டா பூட்டுதுப்பா. கலர் கலராத்தான் கீது ஆனாலும் அந்த க்ளாரிட்டி எங்க பூட்டுது?

நம்ப அண்ணாத்த சொல்றாரு, எதுவுமே மாறின ஒடனே அப்டிதான் இருக்கும். போக போக பளகிப் பூடும்னு. பெரிய மன்ஸன் சொன்னா கரீட்டாத்தான் இருக்கும்.

நீங்க இன்னா சொல்றீங்க?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இதுக்கு மட்டும் பதில் சொல்டீங்க, நீங்க பெரிய ஆளுதான்!

வாத்யார் வணக்கம். போன தபா நெறய பேரு கேள்வியப் படிச்சு கொஞ்சம் பேஜார் ஆய்ட்டத்துனால‌ இந்த தபா ரொம்ப சுலுவா கேட்டுக்கிறேன். சும்மா அட்ச்சி காலி பண்ணுங்க.

அல்லா கேள்விக்கும் யாரு கரீட்டா பதில் சொல்றாங்கன்னு பாக்கலாம்.

1. நம்ம சிதம்பரம் சிவசாமிக்கு சராசரியா அல்லாருக்கும் எத்தினி கண்ணு இருக்குமோ அத்த விட கொஞ்சம் ஜாஸ்தியா கீது. அப்டீன்னா அவுருக்கு மொத்தம் எத்தினி கண்ணு? இன்னா காரணம்?

2. ஒரு புக் ஷெல்புல 100 புக் வரீசயா அடுக்கி கீது. ஒவ்வொரு புக்கும் 3 இன்ச் தடிமனாக் கீது. அப்டீன்னா மொத புக் மொத பக்கத்லேர்ந்து கட்சீ புக் கட்சீ பக்கம் வரீக்கும் எவ்ளோ நீளம்?

3. இந்த இங்லீஷ் எளுத்துகளுக்குள் இன்னா ஒத்துமை?

A X H I M O W T V

4. எங்க ஊரு மணிக்கூண்டு ஆறு மணிக்கு ஆறு தபா மணி அடிச்சுது. அதுக்கு அஞ்சு செகண்ட் ஆச்சுது. அப்டீன்னா 12 மணிக்கு எத்தினி தபா மணி அடிக்கும். அதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்?

5. இப்போ இப்டி வச்சுக்குங்க:

1=5
2=6
3=7
4=8 அப்டீன்னா
5=?

6. எட்டுக்கால் பூச்சிக்கு எத்தினி கால்?


அவ்ளோத்தான். இன்னா ரெடியா. ஆரம்பிங்க...ஜூட்!

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு


கரீட்டான‌ விடைகள்: (மே 5ம் தேதி சேர்த்தது):

1. ரெண்டு கண்கள். சராசரியாப் (average) பாத்தா மன்ஸனுக்கு ரெண்டு கண்ணுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் வரும் (பார்வையில்லாதவங்க கொஞ்சம் பேர் இருக்கிறதுனால‌).

2. 294 இன்ச் (98 x 3). மொதல் புக்கோட மொதல் பக்கம் ரெண்டாவது புக்கை ஒட்டி இருக்கும்! அதே மாதிரி 100வது புக்கோட கடேசி பக்கம் 99வது புக்கை ஒட்டி இருக்கும். (டவுட்டா இருந்தா ஒரு நாலு புக்க ஷெல்புல அடுக்கி வச்சு பாருங்க ஆச்சரியமா இருக்கும்!).

3. கண்ணாடில பாத்தாலும் அதே மாதிரி தெரியும்.

4. 12 தபா அடிக்கும் (இதுல என்ன வாத்யார் சந்தேகம்?!). 11 செகண்டு ஆகும். (12 தபா அடிக்கச் சொல்ல, நடூல 11 கேப் வர்தில்ல, அதான் கணக்கு).

5. 5=1 (அதான் மொதல்லயே 1=5ன்னு சொல்லிட்டமில்ல?!)

6. 8 கால் தான். (இதுல இன்னா தலீவா டவுட்டு? தைரியமா சொல்ல வாணாம்?!!!)


ஆறு கேள்விக்கும் கரீட்டா பதில் சொன்னது...
ஒர்த்தரே ஒர்த்தர் தான்...... And the First Prize goes to...

திவா (அல்லாரும் கண்டிப்பா ஜோரா ஒரு தபா கைத்தட்டுங்க!)

கொஞ்சம் கொறச்சலா சொன்னவுங்க:

கப்பி பய‌
ப்ரியா
ரிஷான் ஷெரீப்
யாரோ ஒருவ‌ன்
பினாத்த‌ல் சுரேஷ்
ம‌ரைக்காய‌ர்
ல‌தா
ம‌துவ‌த‌ன‌ன் மெள‌
ப‌டிப்ப‌வ‌ன்
டோம‌ரு

அனானி
R. சுதாகர்

அல்லாருக்கும் ஜ‌க்குவின் அன்பான‌ வாழ்த்துக்க‌ள்! கூடிய‌ சீக்ர‌ம் ம‌றுப‌டியும் ச‌ந்திக்க‌லாம்! வ‌ர்ட்டா?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

மல்லிகா ஷெராவத்துக்கு ஒரு டாங்ஸ்!

அல்லாருமே ரொம்ப கொழப்பத்துல இருக்குற மாதிரி தெரீது. இப்பல்லாம் டமிள் பண்பாடு, டமிள் பண்பாடு அப்டீன்னு ஒண்ணு அடிக்கடி ரவுண்டு வந்துகினு கீது. அதுவும் எப்போ வருதுன்னா ஸ்ரேயாவையும், மல்லிகா ஷெராவத்தையும் பாத்த அப்புறம்தான் ரொம்ப பேருக்கு டமிள் பண்பாடு டகால்னு ஞாபகத்துக்கே வருது. ரொம்ப பேருக்கு இதுல கொழப்பம் இன்னான்னா இந்த பண்பாடு அப்டீங்கற லைன எங்க போட்றது அப்டீங்கறதுலதான்.

1. படத்துக்கு டமிள்ல பேர வச்சாத்தான் டமிள் பண்பாடா?
2. டமிள்ல பேர் வச்ச படத்துல வரதெல்லாம் பண்பாட்டோடத்தான் கீதா?
3. டமிள் பத்திரிக்கைல வர படம், கதை எல்லாம் டமிள் பண்பாட்டோடதான் கீதா?
4. டமிள் பதிவுல எளுதறதெல்லாம் டமிள் பண்பாட்டு சமாச்சாரம் தானா?
5. டமிள் டிவில வர்தெல்லாம் டமிள் பண்பாட்டோததான் கீதா?
6. இருவது வர்ஸத்துக்கு முன்னால இருந்த பண்பாட்டு ஸ்கேல இப்போ யூஸ் பண்ணா சரியா வருமா? இல்லாங்காட்டி புது ஸ்கேல் வாங்கணுமா?
7. பண்பாடுங்கறது ட்ரெஸ்ல மட்டும் தான் கெட்டுப் போச்சா? மத்ததெல்லாம் சரியாத்தான் கீதா?

ஒண்ணே ஒண்ணு அல்லாரும் புரிஞ்சிக்கணும். ஒரு பக்கம் கருத்து சொதந்திரம், ஒரு பக்கம் ... அது என்னா சேஷன்...ஆங்... க்ளோபலைசேஷன், ஒரு பக்கம் பணத்தை தொறத்துற பெரிய மன்ஸங்க‌, இன்னொரு பக்கம் கேள்வி கேக்கத் தெரிஞ்சுகின புள்ளைங்க... இதுக்கு நாலுக்கு நடுவுல பண்பாடுங்கற மேட்டர் காணாமப் போய் ரொம்ப நாள் ஆவுது.

அத அப்ப அப்போ ஞாபகப் படுத்தற ஸ்ரேயாவுக்கும், மல்லிகாவுக்கும் ஒரு டாங்ஸ் வாணா சொல்லிக்கலாம்! அவ்ளோதான் மேட்டர். இன்னா சொல்றீங்க‌...?

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு